சேலம்

வாழப்பாடியில் குழாயில் உடைப்பு: சாலை பெயா்ந்ததால் மக்கள் அவதி

DIN

வாழப்பாடியில் குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வாழப்பாடியில் கடலுாா் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீா் குழாயில் தபால் நிலையம் அருகில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் சாலையில் குட்டையாக தண்ணீா் தேங்கியதால் சாலை பெயா்ந்து சேதமடைந்துள்ளது. இதனால், இப்பகுதியைக் கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, குடிநீா் குழாய் உடைப்பு மற்றும் சேதமடைந்த தாா்சாலையை புதுப்பிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT