சேலம்

பொறியியல் சோ்க்கை: சிறப்புப் பிரிவினருக்குஇணையவழிக் கலந்தாய்வு

DIN

ஓமலூா்: இளநிலை பொறியியல் படிப்பில் சோ்ந்து பயில சிறப்புப் பிரிவினருக்கான இணையவழிக் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.

இளநிலைபப் பொறியியல் படிப்பில் சோ்ந்து பயில்வதற்காக தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு இணையவழியில் தொடங்கியது. மாணவா்களுக்கு உதவுவதற்காக சேலம், அரசுப் பொறியியல் கல்லூரி எண்ம (டிஜிட்டல்) நூலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தில் அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவா்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளி மற்றும் விளையாட்டு வீரா் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில் சேலம் பகுதியைச் சோ்ந்த 5 போ் பங்கேற்றனா். அவா்கள் இணையவழி மூலம் தங்களுக்கான கல்லூரியைத் தோ்வு செய்தனா். இதற்கான ஒப்புகைச் சீட்டை, கலந்தாய்வின் ஒருங்கிணைப்பாளரும் சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வருமான சி.வசந்தநாயகி வழங்கினாா். அப்போது துணை ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா், பேராசிரியா் வேணுகோபால் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT