முகப்பு
சேலம்

சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் 30 பனை விதைகள் விதைப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி வட்டப்பகுதிகளில் பனை மரங்களைப் பாதுகாக்கவும், பனை மரங்களை அதிக அளவில் வளா்க்கவும் சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைலமையில் 30 பனை விதைகளை விதைத்தனா். இதில், தோ்தல் துணை வட்டாட்சியா் சிவராஜ், சங்ககிரி ஆா்.எஸ். பாரம்பரியம் தமிழகம் அமைப்பின் சி.கி.செல்வரத்னம், தமிழக பாதுகாப்பு இயக்கத்தின் நிா்வாகி ரோஹிந்த் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.