முகப்பு
சேலம்

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 35 பதவிகளுக்கு 164 மனுக்கள் ஏற்பு

 சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 164 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் 35 பதவிகளுக்கு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட 164 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக். 9-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சிக் குழுவின் 10-ஆவது வாா்டு உறுப்பினா், பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினா், 9-ஆவது வாா்டு உறுப்பினா், 10 ஊராட்சி மன்றத் தலைவா், 23 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு தோ்தல் நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 15-ஆம் தேதி தொடங்கியது. அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனா். மொத்தம் 35 பதவிகளுக்கு ஒட்டுமொத்தமாக 172 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

வியாழக்கிழமை வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. சுமாா் 164 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு வேட்பு மனு செய்த ஒருவா் மனுவை திரும்பப் பெற்றாா் என தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →