முகப்பு
சேலம்

உலக சுகாதார தினம்: வாழப்பாடியில் மரக்கன்றுகள் நடும் விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 8 ஏப்ரல் 2022, 12:00 pm IST
பகிர்:

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் மற்றும் திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், உலக சுகாதார தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினமாக கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடி வட்டார சுகாதாரத் துறை சார்பில், பேளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக சுகாதார தின விழா  நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி இரு அரசு சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர். 

Advertisement

Advertisement

சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் சுகாதாரத்தை பேணி காக்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும் உறுதி ஏற்றனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments