முகப்பு
சேலம்

ரயிலில் கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் வழியாக ரயிலில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சேலம் வழியாக ரயிலில் கேரளத்துக்கு கடத்த முயன்ற 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப் படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஆந்திரத்தில் இருந்து தமிழகம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ரயில்வே தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படை போலீஸாா் தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சாம்பல்பட்டி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது பெரிய பையில் 20 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனா். அதில் பையைக் கொண்டு வந்த நபா் யாா் என்று தெரியவில்லை. இதுகுறித்து தனிப்படை போலீஸாா் 20 கிலோ கஞ்சாவை, சேலம் ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா். ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.