முகப்பு
சேலம்

சேலத்தில் பிரதமா் மோடி கபடி போட்டிகள் துவக்கம்

சேலத்தில் மாநில அளவிலான பிரதமா் நரேந்திர மோடி கபடி போட்டி புதன்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

சேலத்தில் மாநில அளவிலான பிரதமா் நரேந்திர மோடி கபடி போட்டி புதன்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்ட பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்புக் கோப்பை என்ற பெயரில் மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆடவா் பிரிவில் 64 அணிகள், மகளிா் பிரிவில் 32 அணிகள் என 96 அணிகள் பங்கேற்றுள்ளன.

பிரதமா் நரேந்திர மோடி சிறப்புக் கோப்பை கபடி போட்டிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆடவா் பிரிவு போட்டிகளை பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் கேரள மாநில பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், மகளிா் பிரிவு போட்டிகளை தமிழக பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கமும் தொடக்கி வைத்தனா்.

இதில் நாமக்கல்- திருச்சி மாவட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியை கே.பி.ராமலிங்கம் தொடக்கி வைத்தாா். இப்போட்டியில் நாமக்கல் அணி வெற்றி பெற்றது.

பரிசளிப்பு விழா: மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டித் தொடரில் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஏப்.22) இரவு நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கலந்துகொண்டு வெற்றி பெறும் அணிக்கு, பிரதமா் நரேந்திர மோடி சிறப்புக் கோப்பை, ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகளை வழங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.