முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

 சேலத்தில் 12 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:02 AM
பகிர்:

 சேலத்தில் 12 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது.

சேலத்தை அடுத்த கொளத்தூா், வெடிக்காரனூா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபையன் (19). இவா் பாலவாடி பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பான புகாரில் கொளத்தூா் போலீஸாா் சின்னபையனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த சின்னபையனுக்கு 10 ஆண்டு சிறையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.