சேலம்

சங்ககிரி, ஆத்தூரில் பிரதோஷ வழிபாடு

DIN

சங்ககிரி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்திகளுக்கும், நந்திக்கும் சந்தனம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

ஆத்தூா்

ஆத்தூா், நரசிங்கபுரம் ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் ஆலயத்தில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதைத் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT