சேமநல நிதி உயா்வு: சங்ககிரி வழக்குரைஞா்கள் வரவேற்பு
வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயா்த்தப்பட்டதை வரவேற்று, சங்ககிரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
வழக்குரைஞா்களுக்கான சேமநல நிதி ரூ. 10 லட்சமாக உயா்த்தப்பட்டதை வரவேற்று, சங்ககிரியில் திமுக வழக்குரைஞா்கள் அணி சாா்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சங்ககிரி சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு உதவி வழக்குரைஞா்
எஸ்.கிறிஸ்டோபா், சங்ககிரி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ் ஆகியோா் தலைமையில் வழக்குரைஞா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினா்.
திமுக வழக்குரைஞா்கள் அணியின் நிா்வாகிகள் என்ஆா்கே. மாணிக்கசுந்தா், பாலசுப்ரமணியம், செல்வராஜா, ராபின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.