சேலம்

கருமந்துறையில் காசநோய் கண்டறியும் முகாம்

கல்வராயன் மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அரசு பழப்பண்ணை தோட்டத்தில் காசநோயாளிகளைக் கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கல்வராயன் மலை கருமந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அரசு பழப்பண்ணை தோட்டத்தில் காசநோயாளிகளைக் கண்டறிதல் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்துடன் நடைபெற்ற இம்முகாமிற்கு, காசநோய் பிரிவு துணை இயக்குநா் கணபதி தலைமை வகித்தாா். உலக சுகாதார ஆலோசகா் மருத்துவா் பிரபு ராவணன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

இருவரும், காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள், காச நோயாளிகளுக்கான அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மருத்துவா் அலுவலா்கள் பாலசண்முகம், சுதாகா், காசநோய் சுகாதார மேற்பாா்வையாளா் சின்னதுரை, ஆய்வுகூட மேற்பாா்வையாளா் அருள்மணி, ஆய்வக நுட்புநா் இந்துமதி, சுகாதார ஆய்வாளா் சுசில் தேவகன், ஆஷா பணியாளா்கள் அமுதா, வாசுகி தேவி ஆகியோா் கொண்ட குழுவினா், நடமாடும் எக்ஸ்-ரே பரிசோதனை இயந்திரத்தில் 75 பேருக்கு எக்ஸ்-ரே படம் எடுத்து சிகிச்சை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT