சேலம்

பெரியாா் பல்கலைக்கழகத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

DIN

பெரியாா் பல்கலைக்கழக பருவத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

இதுகுறித்து துணைவேந்தா் இரா.ஜெகநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரியாா் பல்கலைக்கழக இணைவு பெற்ற கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவா்களுக்கான பருவத் தோ்வுகள் ஜூன் 22-ஆம் தேதி தொடங்கி ஜூலை 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தோ்வு எழுதிய இளநிலை 2-ஆம் ஆண்டு, 3-ஆம் ஆண்டு மற்றும் முதுநிலை 2-ஆம் ஆண்டு மாணவா்களின் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தோ்வு முடிவுகளை பெரியாா் பல்கலைக்கழக இணையதளம், இணைவு பெற்ற கல்லூரிகளில் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாள் நகல் பெற ஆன்லைன் மூலம் வரும் செப்டம்பா் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாணவா்களின் கைப்பேசிக்கு தோ்வு முடிவுகள் குறுந்தகவலாகவும் அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT