108 திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்கள். 
சேலம்

ஐயப்பன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆத்தூா் கோட்டை ஸ்ரீகாயநிா்மலேஸ்வரா் ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பன் சன்னதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம், 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதிகாலை 108 வலம்புரி சங்காபிஷேகம் யாகம் நடைபெற்று பின்னா் ஐயப்பனுக்கு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனையடுத்து, வெள்ளிக்கவச சாத்துபடி நடைபெற்றது.

வெள்ளிக் கவச அலங்காரத்தில் ஐயப்பன்.

உலக நன்மைக்காக பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

அபிஷேக, ஆராதனையை அருணாச்சலக் குருக்கள் தலைமையில் ஐயப்ப சிவம், கணேச சிவம் நடத்தினா். நிகழ்ச்சியை தொழிலதிபா் அ.லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு 4,764 பேருந்துகள் இயக்கம்!

எதிர்ப்புகள் விலகும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கருப்புக் கொடி ஏற்றிய மக்கள்

ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு

காா் மீது தண்ணீா் லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT