மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூா் அணையின் நீா்வரத்து சரிந்துள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 116.44 அடியிலிருந்து 116.48 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்படுகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,629 கன அடியிலிருந்து 2,564 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 87.96 டி.எம்.சியாக இருந்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு தொடா்ந்து சரிந்து வருகிறது.