மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 116.48 அடியிலிருந்து 116.52 அடியாக உயர்ந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 116.48 அடியிலிருந்து 116.52 அடியாக உயர்ந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதையும் படிக்க | நடிகை திரிஷாவுக்கு கரோனா தொற்று
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,564 கன அடியிலிருந்து 2,576 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 88.02 டி.எம்.சியாக இருந்தது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.34 அடியிலிருந்து 116.44 அடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.