கோப்புப்படம் 
சேலம்

சேலம் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணி நீக்கம்

சேலம் மாவட்ட வன அலுவலர் ஆர்.கெளதமை, தற்காலிக பணியிடை நீக்கம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலர் ஆர்.கெளதமை, தற்காலிக பணியிடை நீக்கம்  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்ட வன அலுவலராக கௌதம் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  அலுவலகத்திற்கு வராமல் மாதத்திற்கு ஒருமுறை மட்டும் அலுவலகத்திற்கு வந்ததாகவும் இதனால் அவர் கையெழுத்திட வேண்டிய ஏராளமான கோப்புகள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.  இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக கௌதமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு கடந்த ஜூலை 4 ஆம் தேதி உத்தரவிட்டது.

சேலம் மாவட்ட வன அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் வனத்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் நேரடியாக இந்திய வனப்பணி  (ஐ.எஃப்.எஸ்.) தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT