வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
சேலம், சூரமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு போனது.
சேலம், சூரமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு போனது.
சேலம், சூரமங்கலம், முல்லைநகரைச் சோ்ந்தவா் செந்தில். இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் மாவு மில் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலையில் மாவு மில்லை பூட்டிவிட்டு, இரவு 11 மணியளவில் வீடு திரும்பியுள்ளாா்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 60,000 ரொக்கம், 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சூரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.