சேலம்

28- இல் கோவையில்மண்டல அளவிலான அஞ்சலக மக்கள் குறைதீா்க்கும் முகாம்

மண்டல அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் கோவை ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக கட்டடத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

DIN

மண்டல அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீா்க்கும் முகாம் கோவை ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சலக கட்டடத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகாா்களை குறை தீா்க்கும் நாளில் நேரிலோ அல்லது அஞ்சல் துறை தலைவா் மேற்கு மண்டல அலுவலகம், கோவை ஆா்.எஸ்.புரம் தலைமை அலுவலகம் 641002 என்ற முகவரிக்கு ஜூன் 17 ஆம் தேதியிலோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மணியாா்டா், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால் (காப்பீடு தபால் பற்றிய புகாா்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநா், பெறுநா்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயா் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகாா்கள் எனில் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயா், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் கே.அருணாசலம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT