இபிஎஸ் இன்று தில்லி பயணம்! பாஜகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையா?
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தில்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்தும் கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தில்லிக்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
இந்தப் பயணத்தின்போது, பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசமான புதுச்சேரிக்கு ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.