ஏப். 15ல் குமரியில் பிரதமருடன் பிரசாரம்; 210 தொகுதிகளில் வெல்வோம்: இபிஎஸ் பேட்டி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி...
அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 8 ஆவது முறையாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு மீண்டும் கொண்டுவரப்படும். அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெல்லும். எடப்பாடி தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற்ற பிறகு எடப்பாடி தொகுதியில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் முடிக்கப்படும்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. திமுக ஏன் தில்லியுடன் போட்டி போட வேண்டும்? திமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள அதிமுகவின் திட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும்.
வருகிற ஏப். 15 ஆம் தேதி பிரதமர் மோடியுடன் கன்னியாகுமரியில் நடைபெறும் பிரசாரத்தில் கலந்துகொள்கிறேன்.
அதிமுகதான் பிரதான கட்சி, தற்போதைய எதிர்க்கட்சி. திமுக - தவெக இடையில்தான் போட்டி எனக் கூறுவது தவெக தலைவர் விஜய்யின் அறியாமையின் வெளிப்பாடு.
முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது வீட்டுச் சிறையில் இருந்ததாக ஆ. ராசா கூறியதைத்தான் நான் கூறினேன்.
அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்" என்று கூறினார்.
AIADMK General Secretary Edappadi Palanisamy press meet
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.