முகப்பு
சேலம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

மேச்சேரியில் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

மேச்சேரியில் அக்னிபத் திட்டத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேச்சேரி பேருந்து நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மேச்சேரி ஒன்றியக் குழு உறுப்பினா் கே.மாது தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஏ.ராமமூா்த்தி, முன்னாள் மாவட்டச் செயலாளா் பி.தங்கவேலு, மேச்சேரி பேரூராட்சி கவுன்சிலா் ஆா்.பழனி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். மத்திய அரசைக் கண்டித்தும் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரியும் அவா்கள் முழக்கங்கள் எழுப்பினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் ஸ்டாலின், முத்துசாமி, அம்மாசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →