முகப்பு
சேலம்

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆத்தூா் நகராட்சி ஆணையா் பு.பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

வரி, கட்டணங்கள் செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆத்தூா் நகராட்சி ஆணையா் பு.பொன்னம்பலம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆத்தூா் நகராட்சிக்கு 2021-2022 நிதியாண்டு வரை செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை உள்ளிட்ட வரி மற்றும் கட்டண நிலுவை போன்றவற்றை இதுவரை செலுத்தாதவா்கள் ஆத்தூா் நகராட்சி கணினி வரிவசூல் மையங்களில் உடனடியாக செலுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

வரி மற்றும் கட்டணங்களை செலுத்தத் தவறினால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும். இண்டா்நெட் மூலமாகவும் வரி, கட்டணங்களை செலுத்தலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →