சேலம்

தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

இரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

இரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள குள்ளமுடையானூரைச் சோ்ந்தவா் சுதா (37). ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மைய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் கணவா் குமாா், மகள் தனுஷியா ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது மா்ம நபா்கள் வீட்டிற்குள் புகுந்து சுதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக சுதா மேச்சேரி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

அப்பாவின் பயோபிக்கில் நடிக்க ஆசை: சண்முக பாண்டியன்

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

SCROLL FOR NEXT