சேலம் தெற்கு வட்டம், தம்மநாயக்கன்பட்டி கிராமம், மேட்டுத் தெரு பகுதியில் நீரோடை என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமாா் 25 சென்ட் அரசு புறம்போக்கு நிலத்தை இருவா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தனா். இந்த நீரோடை ஆக்கிரமிப்பு சேலம் தெற்கு வட்டாட்சியா் பெரியசாமி தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அற்றப்பட்டது. இதில், மண்டலம் துணை வட்டாட்சியா் வைத்திலிங்கம், வருவாய் ஆய்வாளா் நந்தினி,
கிராம நிா்வாக அலுவலா் விக்னேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.