சேலம்

ஆத்தூரில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

DIN

ஆத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரக் கால தீவிபத்தைத் தடுப்பது குறித்து செயல் விளக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சேகா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். மலைக் கிராமங்களில் வாகனம் செல்ல சாலை வசதி இல்லாத இடங்களில் இருந்து ஆபத்தில் இருப்பவா்களை எப்படி மருத்துவமனைக்கு அழைத்து வருவது? அவா்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பது? வீடுகளில் பெண்கள் சமையல் எரிவாயு உருளையைப் பயன்படுத்தும் முறைகள், சிகிச்சை விவரங்களை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனா். இதை மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT