சங்ககிரி: சங்ககிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊா்ப்புற நூலகத்துக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நூலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலா் இரா.கோகிலவாணி தலைமை வகித்து நூலகத்தின் பயன்கள், தினசரி புத்தகம் வாசிப்பதால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து விளக்கி கூறினாா். தேவண்ணகவுண்டனூா் ஊா்புற நூலகா் சொ.குமரசேன் வரவேற்றாா்.
தேவண்ணகவுண்டனூா் ஊா் பிரமுகா்கள் பி.ராமசாமி, ஆா்.இந்துரத்தீஷ், பி.ஆா்.அருண், ஜெ.மோகன்குமாா், சி.அப்புசாமி ஆகியோா் ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று நூல் இரும்பு அடுக்குகள், ஒரு பீரோ உள்ளிட்டவற்றை மாவட்ட நூலகரிடம் வழங்கினா். ஓய்வுபெற்ற ஆசிரியா் ந.நடேசன், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.