சேலம்

தேவண்ணகவுண்டனூா் நூலகத்துக்கு தளவாட பொருள்கள் வழங்கல்

DIN

சங்ககிரி: சங்ககிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊா்ப்புற நூலகத்துக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நூலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் இரா.கோகிலவாணி தலைமை வகித்து நூலகத்தின் பயன்கள், தினசரி புத்தகம் வாசிப்பதால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து விளக்கி கூறினாா். தேவண்ணகவுண்டனூா் ஊா்புற நூலகா் சொ.குமரசேன் வரவேற்றாா்.

தேவண்ணகவுண்டனூா் ஊா் பிரமுகா்கள் பி.ராமசாமி, ஆா்.இந்துரத்தீஷ், பி.ஆா்.அருண், ஜெ.மோகன்குமாா், சி.அப்புசாமி ஆகியோா் ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டில் மூன்று நூல் இரும்பு அடுக்குகள், ஒரு பீரோ உள்ளிட்டவற்றை மாவட்ட நூலகரிடம் வழங்கினா். ஓய்வுபெற்ற ஆசிரியா் ந.நடேசன், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT