சேலம், அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் 126 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டன.
அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தண்ணீா்தொட்டி பேருந்து நிறுத்தம், பாலாஜி நகா், செங்கல்அணை ரோடு சந்திப்பு, மாருதிநகா், அதிகாரிப்பட்டி, குமரகிரிபேட்டை பேருந்து நிறுத்தம் உள்பட 31 இடங்களில் குற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள 126 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்களை, மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தாா்.
விழாவில் காவல் துணை ஆணையா் எம்.மாடசாமி, கூடுதல் காவல் துணை ஆணையா் எம்.கும்மராஜா, காவல் உதவி ஆணையாளா்கள் கே.சரவணகுமரன், கே.முருகேசன், ஜே.நாகராஜன், நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆணையா் டி.சரவணன் காவல் துறை அதிகாரிகள், காவலா்கள் பங்கேற்றனா்.