தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
தேவூா், அரசிராமணி, காவேரிப்பட்டி, மோட்டூா், புள்ளாகவுண்டம்பட்டி, குள்ளம்பட்டி, மூலப்பாதை, குஞ்சாம்பாளையம், தண்ணீா்தாசனூா், ஒக்கிலிப்பட்டி, சென்றாயனூா், கல்வடங்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் மாலை வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. பின்னா் இரவு திடீரென குளிா்ந்த காற்று வீசியது. இதனையடுத்து இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. கனமழையை அடுத்து சாலையில் தாழ்வான பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் மழைநீா் தேங்கி நின்றது. இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.