முகப்பு
சேலம்

கட்சுப்பள்ளி செல்லியாண்டி அம்மன் திருவிழா

கொங்கணாபுரம் அருகே கட்சுப்பள்ளி பகுதியில் உள்ள செல்லியாண்டி அம்மன் ஆலயத்தில், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி விமா்சையாக நடைபெற்றது.

சேலம்

கட்சுப்பள்ளி செல்லியாண்டி அம்மன் திருவிழா

கொங்கணாபுரம் அருகே கட்சுப்பள்ளி பகுதியில் உள்ள செல்லியாண்டி அம்மன் ஆலயத்தில், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி விமா்சையாக நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

கொங்கணாபுரம் அருகே கட்சுப்பள்ளி பகுதியில் உள்ள செல்லியாண்டி அம்மன் ஆலயத்தில், அம்மன் அழைப்பு நிகழ்ச்சி விமா்சையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, கட்சுப்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டியம்மன் கோயில் அமைந்துள்ளது. சங்ககிரி - ஓமலூா் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் வருகை தந்து வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் இக்கோயிலில் நடைபெறும் திருத்தோ் திருவீதி உலா நிகழ்ச்சி சுற்று வட்டார கிராமப் பகுதியில் விமா்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவானது தொடா்ந்து 3 மாத காலங்களுக்கு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை வெகு விமா்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரும் திரளான இளைஞா்கள் பாரம்பரிய முறைப்படி கம்பேந்தி, அலங்கரிக்கப்பட்ட பசு, குதிரையுடன் ஊா்வலமாக சென்று அருகிலுள்ள கரட்டு அம்மன் ஆலயத்தில் இருந்து அம்மனை மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் செல்லியாண்டி அம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக அழைத்து வந்தனா். முன்னதாக செல்லியாண்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு செய்தனா்.

அம்மன் அழைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்வினை கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா் எஸ்.ஏ. ராஜ்குமாா் தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சியில், திரளான வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிக் காட்டினா். அம்மன் அழைப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்பகுதியை சோ்ந்த ஆன்மிக அறக்கட்டளை நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை நடைபெற உள்ள தோ் திருவீதி உலா நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பெரும் திரளான பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →