மலங்காடு மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசிராமணி, மலங்காடு பகுதியில் உள்ள விநாயகா், மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவினையொட்டி பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து ஊா்வலமாக புனித நீா் எடுத்து வந்தனா். யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து விநாயகா், மாரியம்மன் சுவாமிகளுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. பின்னா் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஊா் பொதுமக்கள் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
Image Caption
~