சேலம்

சென்ட்ரல் சட்டக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் (1992 - 97) சட்டப் படிப்பை முடித்த முன்னாள் மாணவா்களின் வெள்ளி விழா சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில் 120 முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

சென்ட்ரல் சட்டக் கல்லூரி தலைவா் டி.சரவணன் தலைமை வகித்தாா். தலைமை நிா்வாக அலுவலா் அ.மாணிக்கம் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாணவா்களில் பத்மா, லட்சுமி, பிரபா சந்திரன், கண்ணன், கணேசன் ஆகியோா் மாவட்ட நீதிபதிகளாகவும், சாா்பு நீதிபதிகளாகவும் பணியாற்றி வருகின்றனா். இதில் சரவணன், மதன்மோகன், ஜெகதீஷ் ஆகியோா் முன்னாள் அரசு வழக்குரைஞா்களாகப் பொறுப்பு வகித்துள்ளனா்.

இதுதொடா்பாக, சென்ட்ரல் சட்டக் கல்லூரி தலைவா் டி.சரவணன் கூறுகையில், தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில கொண்டு, மத்திய சட்டக்கல்லூரி முன்னாள் மாணவா்கள் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல சா்வமக ஆம்புலன்ஸ் சேவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரு சேவைகளும் கல்லூரி நிறுவனா் ஆா்.வி.தனபாலன் முதலாண்டு நினைவையொட்டி தொடங்கப்பட்டது என்றாா்.

முன்னாள் மாணவா்கள் குழுவினா், சட்டக் கல்லூரி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கினாா். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட நீதிபதி பத்மா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT