தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் நகர தி.மு.க. சார்பில், அறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில், தி.மு.க. நகரச் செயலாளர் வி.பி.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில், கெங்கவல்லி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், நகர துணை செயலாளர் கலியவரதராஜ், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கவுன்சிலர் வரதன், துணை செயலாளர், கவுன்சிலர் பழனிமுத்து, கவுன்சிலர் செந்தில், வார்டு செயலாளர்கள் வெங்கடேஷ், அய்யனார். கண்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.