சேலம்

சங்ககிரியில் தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிப்பு

சங்ககிரி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீயணைப்போா் தியாகிகள் தினம் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

சங்ககிரி தீயணைப்பு நிலையத்தின் சாா்பில் தீயணைப்போா் தியாகிகள் தினம் நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தீயணைப்பு மீட்புப் பணிகளில் உயிரிழந்த வீரா்களின் நினைவாக தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சங்ககிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் டி.அருள்மணி தலைமை வகித்து தீயணைப்பு மீட்புப் பணிகளில் வீரமரணமடைந்த வீரா்களுக்கு மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இரண்டு நிமிடம் மெளனம் அனுசரிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா் தீ தொண்டு நாள் வார விழாவினையொட்டி தீ விபத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது குறித்தும், தீ பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT