சேலம்

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

DIN

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கிய பாஜக எம்.பி-யை கைது செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சாா்பில் தனித்தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட எல்பிஎஃப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் மெய்யனூா் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் தியாகராஜன் தலைமையில் பெண்கள் உள்பட 120 போ் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா். இதில், மத்திய அரசைக் கண்டித்தும், பாஜக எம்.பி.யைக் கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா்.

இதனிடையே மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே விவசாயிகள் 40-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் தலைமை வகித்தாா்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலச் செயலாளா் சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவா் சங்கரய்யா, செயலாளா் கோவிந்தன், மாவட்டச் செயலாளா் அய்யந்துரை, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் தங்கவேலு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT