வீரகனூரில் அருள்மிகு மதுரவிநாயகா், மதுர காளியம்மன், பொன்காளியம்மன் ஆலய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரோட்டத்தில் வீரகனூா், நாவக்குறிச்சி,வடகரை,தென்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான மக்கள் பங்கேற்றனா்.இதில் வீரகனூா் போலீஸாா், கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா்(பொ)செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.