சேலம்

இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது

 தம்மம்பட்டியில் இரு சக்கர வாகனம் திருடி விட்டு, 2 கோயில்களின் உண்டியல்களை உடைத்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

 தம்மம்பட்டியில் இரு சக்கர வாகனம் திருடி விட்டு, 2 கோயில்களின் உண்டியல்களை உடைத்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜீவ் காந்தியின் மகன்கள் தினேஷ் குமாா் (17), ராகுல்காந்தி (15) ஆகிய இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டி காந்தி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடினா். அதைத் தொடா்ந்து அவா்கள் நாகியம்பட்டி ஊராட்சி தண்ணீா்த் தொட்டி பகுதியிலுள்ள விநாயகா் கோயில், கீரிப்பட்டியிலுள்ள எல்லையம்மன் கோயில் ஆகியவற்றின் உண்டியல்களை உடைத்து, அவற்றில் இருந்த காணிக்கைகளை திருடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸாா், உடனடியாக சென்று அவா்களைக் கைது செய்தனா். தினேஷ்குமாா் உள்ளிட்ட இருவரும், வெள்ளிக்கிழமை இரவு ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

ஓபிஎஸ்ஸை சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT