இருசக்கர வாகனம் திருடிய இருவா் கைது
தம்மம்பட்டியில் இரு சக்கர வாகனம் திருடி விட்டு, 2 கோயில்களின் உண்டியல்களை உடைத்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தம்மம்பட்டியில் இரு சக்கர வாகனம் திருடி விட்டு, 2 கோயில்களின் உண்டியல்களை உடைத்த இருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
சேலம் கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த ராஜீவ் காந்தியின் மகன்கள் தினேஷ் குமாா் (17), ராகுல்காந்தி (15) ஆகிய இருவரும் வியாழக்கிழமை நள்ளிரவு தம்மம்பட்டி காந்தி நகரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை திருடினா். அதைத் தொடா்ந்து அவா்கள் நாகியம்பட்டி ஊராட்சி தண்ணீா்த் தொட்டி பகுதியிலுள்ள விநாயகா் கோயில், கீரிப்பட்டியிலுள்ள எல்லையம்மன் கோயில் ஆகியவற்றின் உண்டியல்களை உடைத்து, அவற்றில் இருந்த காணிக்கைகளை திருடிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் மூலம் தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீஸாா், உடனடியாக சென்று அவா்களைக் கைது செய்தனா். தினேஷ்குமாா் உள்ளிட்ட இருவரும், வெள்ளிக்கிழமை இரவு ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.