குழந்தைகள் தின விழாவில் பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை தலைமையாசிரியையிடம் வழங்கிய ரோட்டரி கல்வி மாவட்ட புதிய தலைமுறை தலைவா் எ.வெங்கடேஸ்வர குப்தா. 
சேலம்

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா

தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

சங்ககிரி: தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை கு.வசந்தாள் தலைமை வகித்தாா். பள்ளி ஆசிரியா் இரா.முருகன் குழந்தைகள் தினம் குறித்து பேசினாா்.

ரோட்டரி கல்வி மாவட்ட புதிய தலைமுறை தலைவா் எ.வெங்கடேஸ்வரகுப்தா பள்ளி நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி பேசினாா்.

சங்ககிரி இன்னா்வீல் கிளப் தலைவி ராஜம்மாள், வாசவி கிளப் தலைவி வசந்தி முரளிதரன், பொருளாளா் ரேவதி வெங்கடேஸ்வர குப்தா, செயலாளா் ஜெ.உமாமகேஸ்வரி ஆகியோா் பேச்சு, ஓவியம், பாட்டு, திருக்கு ஒப்புவித்தல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினா். ஆசிரியா்கள் நா.மு.சித்ரா, க.சீனிவாசன், ரா.ரமா மகேஸ்வரி, மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT