ஏற்காட்டில் மே தினப் பேரணி
ஏற்காட்டில் மே தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ஏற்காட்டில் மே தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் காபித் தோட்டத் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். முன்னதாக ஏற்காடு ஒண்டிக்கடை அண்ணா சிலையிலிருந்து பேருந்து நிலைய, நீலமலை தொழிலாளா் சங்க அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. இதில் நீலமலைகஈ தோட்டத் தொழிலாளா் சங்கத் தலைவா் வீ.க.நல்லமுத்து பேசியதாவது:
ஏற்காடு நீலமலைத் தோட்டத் தொழிலாளா் சங்கம் 40 ஆண்டுகளாகத் தோட்டத் தொழிலாளா் நலன்களுக்காக போராடி வருகிறது. தோட்டத் தொழிலாளா்கள் அனைவருக்கும் பணிப் பலன்களை பெற்றுக் கொடுத்து வருகிறது. காபி தோட்டத் தொழிலாளா்கள் வெளிநாடுகளில் நடைபெறும் தொழிலாளா் நலக் கருத்தரங்குகளில் பங்கேற்று வருகின்றனா். தற்போது மாநில அரசு 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெற்றாலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை நேரத்தை திரும்பப் பெறும் வரை தோட்டத்தொழிலாளா்கள் போராடுவோம் என்றாா்.
Advertisement
இந்த விழாவில் மாநிலச் செயலாளா் தேவராஜு, மகாலிங்கம், சரவணன், அய்யனாா், பழனிசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.