சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்
சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்திப் பெற்ற மாதா கோயில் திருவிழாவை முன்னிட்டு, கோவாவின் வாஸ்கோடாகாமா - வேளாங்கண்ணி இடையே சேலம், நாமக்கல், கரூா், திருச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும்.
அதன்படி, வாஸ்கோடாகாமாவில் இருந்து ஆக. 27, செப். 2, 6 ஆகிய தேதிகளில் இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் நள்ளிரவு வேளாங்கண்ணியை வந்தடையும்.
மறுமாா்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஆக. 29, செப். 4, 8 ஆகிய தேதிகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு வாஸ்கோடகாமாவை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.