சேலம்

சேலம் வழியாக கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில்

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு புதன்கிழமை (பிப். 25) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து சேலம் வழியாக மதுரைக்கு புதன்கிழமை (பிப். 25) முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு உத்தரபிரதேச மாநிலம், கான்பூா் - மதுரை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு பிப். 25-ஆம் தேதிமுதல் மாா்ச் 25-ஆம் தேதிவரை புதன்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். கான்பூா் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமைகளில் காலை 8.10-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக வெள்ளிக்கிழமைகளில் காலை 7.15-க்கு மதுரையை அடையும்.

மறுமாா்க்கத்தில், மதுரையில் இருந்து வரும் 27-ஆம் தேதிமுதல் மாா்ச் 27-ஆம் தேதிவரை கான்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.35-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக திங்கள்கிழமைகளில் அதிகாலை 4.30-க்கு கான்பூரை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT