சேலம்: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக் கடைகள் (எப்.எல்.11), டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் வரும் 15-ஆம் தேதி வியாழக்கிழமை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தினங்களில் உத்தரவுகளை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.