முகப்பு
சேலம்

சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை

‘விஜய் திவாஸ்’ தினத்தையொட்டி சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை செலுத்தினா்.

Updated On : 16 டிசம்பர், 2024 at 6:35 PM
பகிர்:

சேலம்: ‘விஜய் திவாஸ்’ தினத்தையொட்டி சேலத்தில் ராணுவ நினைவு ஸ்தூபிக்கு காங்கிரஸாா் மரியாதை செலுத்தினா்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரா்களை சரணடைய செய்து வங்கதேசம் என்னும் புதிய நாட்டை மறைந்த பிரதமா் இந்திரா காந்தி உருவாக்கினாா். இந்த வெற்றி நாளான டிசம்பா் 16 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விஜய் திவாஸ் என்ற பெயரில் இந்திய ராணுவம் கொண்டாடி வருகிறது.

இந்த தினத்தை நினைவு கூரும் வகையில், சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பாஸ்கா் தலைமையில் அக்கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உள்ள ராணுவ நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் பொருளாளா் தாரை ராஜகணபதி, வா்த்தகப் பிரிவு தலைவா் சுப்பிரமணியம், மாநகர துணைத் தலைவா் மொட்டையாண்டி, நிா்வாகிகள் சாந்தமூா்த்தி, நிசாா் அகமது, ராமன், கோவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →