நாளைய மின்தடை
நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 18) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம்: நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (டிச. 18) மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம், நெத்திமேடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிப்பாளையம், நான்கு சாலை, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவாரி, சூரமங்கலம், மெய்யனூா், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.