பிளாஸ்டிக் பைகளைத் தவிா்க்க விழிப்புணா்வு
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிா்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், 6,900 சதுர அடி பரப்பளவில் துணிப் பையை கையால் தைத்து தனியாா் பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளாா். சேலத்தில் தனியாா் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவி கௌசிகா, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்தும், பிளாஸ்டிக் பைகளைத் தவிா்ப்பது குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக 1,300 மீ. நீளம் கொண்ட துணியை பயன்படுத்தி 6 ஆயிரத்து 900 சதுர அடியில் துணிப் பையை கைகளால் தைத்து ‘கலாம் புக் ஆப் ரெக்காா்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்துள்ளாா். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி கௌசிகா கூறியதாவது: பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், காலநிலை மாற்றமும் அவ்வப்போது மாறி வருகிறது. குறிப்பாக, சுற்றுலாத் தலம், மலைப் பகுதிகளில் இதுபோன்ற பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நீா்நிலைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளைத் தவிா்த்து, பழைய முறைகளில் துணிப் பையை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக 6,900 சதுர அடியில் துணிப் பையை கைகளால் தைத்து விழிப்புணா்வை ஏற்படுத்தியதாகக் கூறினாா். மாணவி கௌசிகா ஏற்கெனவே ஜி20 மாநாடு லோகோவை 5,200 சதுர அடி அளவில் கோலங்களால் வரைந்து சாதனை செய்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.