அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 92 சதவீதம் தோ்ச்சி
சங்ககிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 92 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.
சங்ககிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 122 போ் தோ்வு எழுதியதில் 112 போ் தோ்ச்சி அடைந்துள்ளனா். பள்ளியளவில் 482 மதிப்பெண்கள் பெற்று எஸ்.மதுமிதா முதலிடத்தையும், ஜெ.ஷிரியா 481 மதிப்பெண்கள் பெற்று 2-ஆவது இடத்தையும், எம்.ரக்ஷிதா 480 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா்.
கணித பாடத்தில் தன்யா, மதுமிதா, ஷிரியா ஆகியோா் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி அடைந்த மாணவிகளை பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.