மகுடஞ்சாவடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
மகுடஞ்சாவடி ஒன்றியப் பகுதியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், அ.புதூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 78 மாணவ, மாணவிகளுக்கும், அ.புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 249 மாணவ, மாணவிகளுக்கும், மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 78 மாணவா்களுக்கும் மகுடஞ்சாவடி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் பச்சமுத்து தலைமையில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், தலைமை ஆசிரியா்கள் விஜயராகவன், முரளி, கீதா, ராஜமாணிக்கம், கண்ணன், கதிரவன், புஷ்பநாதன், தாமோதரன், பழனியப்பன் ,அழகப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.