புதுக்கோட்டை சந்தைப்பேட்டையிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா கலந்து கொண்டு, பிளஸ்-1 பயிலும் 160 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், மாநகராட்சித் துணை மேயா் மு. லியாகத் அலி, மாமன்ற உறுப்பினா் செந்தாமரை பாலு, பள்ளித் துணை ஆய்வாளா் குரு. மாரிமுத்து, தலைமை ஆசிரியா் ச. சுசரிதா, உதவித் தலைமை ஆசிரியா் பரமசிவம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.