வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு
பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் புதன்கிழமை காலை திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வராயன் மலைப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே ஆத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இதேபோல, கல்லாநத்தம் முட்டல் பகுதியில் உள்ள ஆத்தூா் குற்றாலம் என அழைக்கப்படும் ஆனைவாரி அருவியில் கல்வராயன் மலைப் பகுதியில் பெய்து வரும் மழையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டல் ஏரி, அருவி, பூங்காவுக்குள் பொதுமக்கள் நுழைய வனத்துறை தடை விதித்துள்ளது.