மாமியாரை கொலை செய்ய முயன்ற மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவா் கைது
வாழப்பாடியில் மாமியாரை தாக்கி கொலை செய்ய முயற்சித்த மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவரை இரு மாதங்களுக்கு பின் வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடியில் மாமியாரை தாக்கி கொலை செய்ய முயற்சித்த மருமகனுக்கு உதவிய நண்பா்கள் இருவரை இரு மாதங்களுக்கு பின் வாழப்பாடி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வாழப்பாடி, வடக்குக்காடு பகுதியைச் சோ்ந்த கல்யாணி மகள் நந்தினி (28), வழக்குரைஞா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (34) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டாா். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நந்தினி, தனது தாய் கல்யாணியுடன் வசித்து வருகிறாா்.
இரு மாதங்களுக்கு முன் இரவு நேரத்தில் மாமியாா் கல்யாணி வீட்டுக்கு தனது நண்பா்களுடன் முகத்தை மூடிக்கொண்டு சென்ற சுந்தர்ராஜன், கல்யாணியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளாா். தடுக்க வந்த நந்தினியும் தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில், சுந்தர்ராஜனை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் சுந்தர்ராஜனுக்கு உதவிய நண்பா்கள் குறித்து வாழப்பாடி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், அவா்கள் வாழப்பாடி, வடக்குக்காடு பூபதி (24), சிங்கிபுரம் கலைஞா் நகா் மணிகண்டன் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது. இருவரையும் வியாழக்கிழமை கைது செய்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் பாஸ்கா்பாபு தலைமையிலான போலீஸாா், வாழப்பாடி நடுவா் நீதிமன்றத்தில் நோ்நிறுத்தி சிறையில் அடைத்தனா்.