கைது 
தூத்துக்குடி

மூதாட்டி கொலை: மருமகன் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில், மாமியாரை தாக்கி கொலை செய்த வழக்கில் மருமகனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த சின்னையா மனைவி பாப்பா (75). சின்னையா இறந்துவிட்டாா். இவா்களின் 4 மகள்கள், ஒரு மகனுக்கு திருமணமாகி விட்டது. 4ஆவது மகள் சுப்புராணி - லிங்கதுரை தம்பதிக்கு குழந்தைகள் இல்லாத நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்புராணி கடந்த மாதம் உயிரிழந்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பாப்பா வீட்டுக்கு வந்த லிங்கதுரை, மனைவியின் நகையைக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது பாப்பாவை தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பாப்பாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து லிங்கதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவா் கைது

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்

பாகிஸ்தானில் ரகசிய பயிற்சி பெற்ற கெளரவ் கோகோய்: அஸ்ஸாம் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

SCROLL FOR NEXT